மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுவரும் வறிய குடும்பங்களை சேர்ந்த 80 மாணவர்களை இனங்கண்டு அவர்களின் குடும்பங்களுக்கு குறித்த நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 1500 ரூபாய் பெறுமதியான அரிசி, கோதுமை மா, பருப்பு, உப்பு, சோயா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு இலட்சத்து இருப்பது ஆயிரம் பெறுமதியான குறித்த பொருட்களை வீடுவீடாக சென்று அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் இணைந்து வழங்கியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
No comments: