News Just In

6/15/2021 06:28:00 AM

150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை...!!


இந்தியாவின் ஆக்ரா அருகே உள்ள தாராயாய் கிராமத்தில் திங்கள் கிழமை விளையாடிக் கொண்டிருந்த போது ஐந்து வயது குழந்தை 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. 

இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர். 

குழந்தையின் தந்தை சோட்டாலால் தோண்டிய போர்வெல்லில் குழந்தை விழுந்ததாக கிராமத்தினர் கூறி உள்ளனர். ஆக்ரா கிராமப்புறத்தில் உள்ள பதேஹாபாத்தில் உள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்ற்குட்பட்ட பகுதியில் நேற்று காலை 8:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறும் போது "இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்ததிலிருந்து குழந்தையை மீட்கும் பணி தொடர்கிறது.எங்கள் கேள்விகளுக்கு குழந்தை பதிலளித்து வருகிறது என கூறினார்.




No comments: