News Just In

9/24/2020 05:47:00 AM

உள்நாட்டு சந்தையில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் அரிசியின் விலை!!


உள்நாட்டு சந்தையில் அரிசி வகைகளின் விலை 100 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை மத்திய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்ஜித் தெரிவித்துள்ளார்.

அதேபோல சில அரிசி வகைகளின் விலை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையையும் கடந்து சென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்காக திரைசேறியிடமிருந்து அரசாங்கம் 224 கோடி ரூபாவை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: