மட்/சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் மட்/விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவர்களுக்காக மட்/சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இக் கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது.
இக் கருத்தரங்கினை G.N.N.Promo.com(Gunam- கனடா) நிறுவனத்தின் நிதியுதவியுடன் கல்வி அபிவிருத்தி சங்கம்( EDS) அமுல்படுத்துகின்றது.
குறித்த கருத்தரங்கில் சிவானந்தா தேசிய பாடசாலையின் உப அதிபர் சொர்னேஸ்வரன், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்க(EDS) ஸ்தாபகர் திரு.S.தேவசிங்கன், சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவர் B.சசிதரன் மற்றும் பாடசாலை உப அதிபர்கள், சிவானந்தா பாடசாலை ஆசிரியர்கள், விவேகானந்தா பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந்த விசேட கருத்தரங்கின் வளவாளர்களாக கல்குடா ஆசிரிய ஆலோசகர் திருமதி.E.V.கனகரெட்ணம், திருமதி.செள.அருளேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கின் ஆரம்பத்தில் சிவானந்தா பாடசாலை உப அதிபர் உரையாரும் பொது பாடசாலை மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு செயற்படும் பாடசாலை பழைய மாணவர்களுக்கும், கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கும் நன்றி தெரிவித்ததோடு மட்/சிவானந்த பாடசாலை மற்றும் மட்/விவேகானந்தா பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வளவாளர்கள் தமது கருத்தரங்கை ஆரம்பித்தனர்.
இந்த கருத்தரங்கின் ஆரம்பத்தில் சிவானந்தா பாடசாலை உப அதிபர் உரையாரும் பொது பாடசாலை மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு செயற்படும் பாடசாலை பழைய மாணவர்களுக்கும், கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கும் நன்றி தெரிவித்ததோடு மட்/சிவானந்த பாடசாலை மற்றும் மட்/விவேகானந்தா பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வளவாளர்கள் தமது கருத்தரங்கை ஆரம்பித்தனர்.










No comments: