News Just In

1/30/2020 05:47:00 PM

உருக்குலைந்த நிலையில் இளம் தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுப்பு


மஹரகம – நாவின்ன, தேவானந்த வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் சில தினங்களுக்கு முன்னரே இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: