News Just In

12/07/2019 09:58:00 AM

முன்பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை!

முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஹாலி-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹாலி-எல ரொக்கத்தென்ன தோட்ட பழைய பிரிவில் முன்பள்ளியொன்றை நடத்திவந்த 34 வயதான திருமணமாகாத ஆசிரியை ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த ஆசிரியையின் சடலம் தற்போது பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: