News Just In

12/01/2019 10:00:00 AM

வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வு

(சதீஸ் )
மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு வௌ்ளிக்கிழமை (29) வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு.எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி சி.கங்கேஸ்வரன் (பிரதிக் கல்விப்பனிப்பாளர் நிருவாகம்ஈகல்குடா கல்வி வலயம்) மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வைத்தியக் கலாநிதி இ.சிறிநாத் (பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி-செங்கலடி) கலாநிதி ப.இளங்கோ (சிரேஷ;ட விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக் கழகம்) விசேட விருந்தினர் திரு ச.தட்சணாமூர்த்தி (கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏறாவூர்பற்று-02) பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மணவர்கள் பெற்றோர்கள் ஏராளமாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

2018 ஆம் ஆண்டு கல்வி இணைப் பாட விதானம் தமிழ் மொழிதினப் போட்டிகள் ஏனைய போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் வரதராஜன் அவர்களும் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






















No comments: