News Just In

11/26/2019 02:44:00 PM

கல்லடியில் பொலிசார் மற்றும் முதியவர் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் பலி! இருவர் படுகாயம்!


மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் இன்று (26) மதியம் ஏற்பட்ட விபத்தில் கல்லடி வேலூர் பகுதியை சேர்ந்த சௌந்தராஜா (வயது 61) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்துள்ளார்.

கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் ICBT கட்டிடத்திற்கு முன்னால் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு மோட்டார் சைக்கிளில் முதியவர் ஒருவரும், அடுத்த மோட்டார் சைக்கிளில் இரு பொலிஸாரும்  பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஏற்பட்ட விபத்தில் முதியவர் பலத்த காயத்திற்கு உட்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளத்துடன், இரு பொலிஸாரும் பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments: