News Just In

11/23/2019 07:43:00 AM

அமரர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் கௌரவம்

முன்னாள் பிரதமர் அமரர் டி.எம்.ஜயரத்தனவின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் கௌரவம் செலுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை (22.11.2019) பிற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அன்னாரது பூதவுடல் கொண்டுவரப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பூதவுடலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பொறுப்பேற்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற அதிகாரிகளும் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அமரர் டி.எம்.ஜயரத்தனவின் இறுதிக்கிரியைகள் கம்பளை தொழுவ ஹாலியெத்த டி.எம்.ஜயரத்ன மைதானத்தில் இன்று அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளது.

No comments: