News Just In

11/28/2019 12:47:00 PM

பதுளை-செங்கலடி பிரதான வீதியில் கென்ரர் ரக வாகனம் பயணிகள் தரிப்பிடத்துடன் மோதுண்டு விபத்து!

பதுளை-செங்கலடி பிரதான வீதியினை அண்மித்துள்ள பன்குடாவெளி கிராமத்திற்கு செல்லும் பகுதியிலுள்ள பயணிகள் தரிப்பிடக் கட்டடத்துடன் பெரிய கென்ரர் ரக வாகனம் மோதுண்டு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இன்று (28.11.2019) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் கென்ரர் ரக வாகனத்தில் பயணித்தவர்கள் காயமடைந்ததுடன், பயணிகள் தரிப்பிடக் கட்டடம் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது. அதிஷ்டவசமாக உயிராபத்து எதுவும் நிகழவில்லை. 

விபத்து தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

No comments: