News Just In

11/22/2019 11:11:00 AM

கறுவாக்கேணி பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஒருவர் பலி!

இன்று வெள்ளிக்கிழமை (22.11.2019) அதிகாலை 03.30 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கறுவாக்கேணி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த சுங்காங்கேணியை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆறுமுகம் (வயது 58) என்பவர் மீது வீட்டின் பாகங்கள் உடைந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

பலமாக வீசிய காற்றினால் 07 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் அதிகாரி ஆர்.சிவநாதன் தெரிவித்துள்ளார்.
 

No comments: