News Just In

11/24/2019 07:06:00 AM

தொழில் வாய்ப்புக்கான திட்டங்களை உடன் நடைமுறைப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (NAQDAC) ஊடாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கும் அத்தொழில்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அந்தப் பணிகளை மேலும் திறம்பட முன்னெடுப்பது தொடர்பாகவும் துறைசார் நிபுணர்களுடன் அமைச்சர் விரிவாக கலந்துரையாடினார்.

No comments: