News Just In

11/30/2019 07:30:00 AM

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணை-பிரதமர்

கொழும்பில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பெண் அதிகாரி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் இதுவரையில் கிடைக்கவில்லை இருப்பினும் விசாரணை நடைபெநுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரியின் ஒத்துழைப்பும் அவசியமாகும். இந்தப் பெண் அதிகாரியின் ஒத்துழைப்பின்றி விசாரணையை முன்னெடுப்பது சிரமமானதாகும்.

சிசிரிவி கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சிகளும் கவனத்திற்கொள்ளப்பட இருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் பற்றி கவனம் செலுத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அதனை தாம் கண்டிப்பதாகவும் பிரதமர் என்று கூறினார்.

No comments: