அரபி கடலில் ஏற்கனவே "கியார்" புயல் உருவாகியுள்ள நிலையில், புதிதாக "மகா" புயல் உருவாகி உள்ளது.
அரபி கடலில் உருவாகியுள்ள "மகா" புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
"மகா" புயல் திருவனந்தபுரத்தில் இருந்து 320 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் நிலைகொண்டுள்ளது. இந்த புயலானது நாளை தீவிர புயலாக மாறி காற்றின் வேகம் மணிக்கு 95 கி.மீ. முதல் 110 கி.மீ. ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: