தபால் மூலம் வாக்களிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,522 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (31) இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் நேரத்திற்கு வருகை தந்து ஆர்வத்துடன் வாக்களித்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் தொகுதி ரீதியாக வாக்களிக்க தகுதியானோர் விபரம்
மட்டக்களப்பு: 187,682 வாக்காளர்கள்
கல்குடா: 115,974 வாக்காளர்கள்
பட்டிருப்பு : 94,645 வாக்காளர்கள்
மொத்தம்: 398,301 வாக்காளர்கள்








No comments: