News Just In

10/31/2019 05:40:00 PM

தெற்காசிய கராத்தே போட்டிக்கு தெரிவான அக்கரைப்பற்று ராம் கராத்தே சங்க மாணவன்

ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளருமான சிகான் கே.கேந்திரமூர்த்தி அவர்களின் மாணவன்  சோதீஸ்வரன் ரிசோபன் பங்களாதேசில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவரான இவர் 2017ஆம் ஆண்டு மலேசியாவில் இடம்பெற்ற கராத்தே போட்டி நிகழ்வொன்றில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு இரண்டு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் ஒன்றினையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இலங்கை கராத்தே சம்மேளனத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் ராம் கராத்தே சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட 67 மாணவர்கள் 43 தங்கப்பதக்கங்கள், 12 வெள்ளிப்பதக்கங்கள், 18 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 73 பதக்கங்களை வெற்றியீட்டியிருந்தனர்.

No comments: