News Just In

10/30/2019 01:41:00 PM

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வனரோபா தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (30) வனரோபா தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி திட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டு செயலக உத்தியோகத்தர்களுக்கும் ஏனையோருக்கும் மரங்களை வழங்கி வைத்தார்.

 நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் எமது மாவட்டமானது இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகளவு முகம் கொடுக்கும் மாவட்டமாக காணப்படுகின்றது இதற்கு அடிப்படை காரணம் காடழிப்பு எனலாம். இதன் மூலமாக வெள்ளம், வறட்சி, நிலம் உவர் அடைதல் ஆகிய இயற்கை அனர்த்தங்களுக்கு தீர்வாக அமைவது இயற்கை வளத்தினை பாதுகாத்து மரங்களை அதிகளவு நடவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் வை.வி இக்பால் தனது உரையிலே இயற்கையை அதிகளவு நேசிக்கின்ற மக்களாக மாறுகின்றபோதுதான் இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வாழமுடியும் எனவும் தொடர்ச்சியாக நமது மாவட்டத்தின் வன அடர்த்தியை பாதுகாப்பதற்காக கடந்த ஆண்டில் இருந்து இந்தஆண்டு வரை பல்லாயிரக்கணக்கான காட்டு மரங்களை தொடர்ச்சியாக வன பரிபாலன சபையில் இருந்து பெற்று மாவட்டத்தின் எல்லா பகுதியில் இருந்து விநியோகித்து வருவதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் விசேட செயல்திட்டத்தின் கீழ் வனரோபா காட்டுமரங்களை வளப்படுத்தல் செயற்திட்டமானது ஒக்டோபர் 1ம் திகதி தொடக்கம் 31ம் திகதிவரை தேசிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.

தற்போது இலங்கையில் 17வீதமான வனப்பகுதிகளே காணப்படுகின்றது காட்டுவளத்தினை 32வீதம் அதிகரிப்பதற்கான இத்தேசியதிட்டத்தில் அரச, அரசசார்பற்ற அனைத்து திணைக்களங்களும் இதில் இணைந்து தற்போது செயற்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களினூடாகவும் வனபரிபாலன திணைக்களங்களும் மாவட்ட செயலகங்களும் இணைந்து வனரோபா செயற்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மாவட்ட நிகழ்வாக 8ம் திகதி ஒக்டோபர் பெரிய புல்லுமலை மெதடிஸ் தமிழ்கலவன் பாடசாலையில் நடைபெற்ற வனரோபா நிகழ்ச்சி திட்டத்தில் மத தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரங்களை பெற்று கொண்டனர்.

No comments: