நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 78,403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவலின்படி
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 717,918
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 78,403
செல்லுபடியான விண்ணப்பங்கள்: 639,515
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 09ஆம் திகதி வரை நடைபெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொடர்பான செய்தி...
தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்
தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்
No comments: