எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தலானது பல ஆச்சரியமான சம்பவங்களை கொண்டதாக காணப்படுகின்றது.
01. ஆட்சியிலுள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தல் பதிவாகியுள்ளது.
02. இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தல் (35 வேட்பாளர்கள்)
03. அதிகளவான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட ஜனாதிபதி தேர்தலாகவும் இந்த ஜனாதிபதித் தேர்தல் பதிவாகியுள்ளது. (41 வேட்பு மனுக்கள்)
04. அதிக நீளமான வாக்குச்சீட்டை கொண்ட ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகின்றது. ( வாக்குச்சீட்டின் நீளம் 2 அடியை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது)
05. இலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட (400 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை) ஜனாதிபதி தேர்தல்
06. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.
07. பல ஆண்டுகளுக்கு பின்னர் பெண்ணொருவர் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். (பெண்கள் இறுதியாக 1999ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்)
08. இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் போட்டியிடும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல்
09. ஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல்
10. சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் (இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டன)
No comments: