News Just In

5/06/2023 08:59:00 AM

மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இலங்கையில் பிறந்த பிரிட்டன் மருத்துவருக்கு அழைப்பு





மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இலங்கையில் பிறந்த பிரிட்டனின் மருத்துவர் ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் என்எச்எஸ் இல் பணிபுரியும் வைத்தியர் ஹரீன் சில்வாவிற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் காலத்தில் ஆற்றிய பணிக்காக ஹரீன் சில்வா பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

சமூகத்திற்கு அளப்பரிய பங்களிப்பை செய்தமைக்காக முடிசூட்டும் நிகழ்விற்கு அழைக்கப்படும் சாதாரண மனிதர்கள் பலரில் ஹரீன் சில்வாவும் ஒருவர்.

கொவிட் பெருந்தொற்றிற்கு முன்னதாக ஹரீன்சில்வா வீதி மருத்துவராக தொண்டாற்றினார். தனது காலை, மதிய சத்திர கிசிச்சைகளிற்கு இடையில் வீடற்றவர்களிற்கு சேவையாற்றினார்-.

முடிசூட்டும் நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து பதற்றத்துடன் உள்ள போதிலும் அந்த வரலாற்று நிகழ்வில் கலந்துகொள்வதை பெரிதும் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments: