News Just In

5/06/2023 08:48:00 AM

உயிரிழந்த கன்றுக்குட்டிக்கு அருகில் கண்ணீருடன் காத்திருந்த தாய் பசு!





மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கன்றுக்குட்டி உயிரிழந்த நிலையில் அதன் தாய் அருகில் கண்ணீருடன் நிற்பது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் (5) மாலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக வாகனம் ஒன்று கன்றுக்குட்டியை மோதிவிட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில் நீண்ட நேரம் உயிருக்கு போராடிய குறித்த கன்றுக்குட்டி உயிரிழந்துள்ளது.

இதன்போது அங்குவந்த அதன் தாயும், சகோதர குட்டியும் கண்ணீர்சிந்திய நிலையில் கன்றுக்குட்டியின் சடலத்திற்கு அருகில் நின்றமை காண்போருக்கு வேதனையை ஏற்படுத்தியிருந்தது.

No comments: