News Just In

12/27/2021 09:05:00 PM

தெய்வீக கிராம நிகழ்வில் பாபு சர்மா குருக்கள் கலந்து கொண்டார்.



எஸ்.எம்.எம்.முர்ஷித்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பிரதேச செயலகம் நடாத்திய தெய்வீக கிராம நிகழ்வு தீவுச்சேனை முத்துவிநாயகர் ஆலய முன்றலில் சனிக்கிழமை (25.12.2021) இடம் பெற்றது.

வெலிக்கந்தை பிரதேச செயலக இந்துசமய அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சுந்தர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமரும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ஸவின் இந்துமத விபகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கலந்து கொண்டார்.


இந் நிகழ்வில் அதிதிகளாக சர்வதேச குருபீடம் ஸ்ரீ வித்தியாகுருகுலம் அமைப்பாளர் சிவஸ்ரீ ஆர்.தர்சக சர்மா, பொலநறுவை மாவட்ட இந்துசமய கலாசார உத்தியோகத்தர் ஆர்.செவ்விதன், பொலநறுவை மாவட்ட இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ எஸ்.தேவராஜா தீவுச்சேனை முத்துவிநாயகர் ஆலய தலைவர் எம்.செல்வகுமார், செயலாளர் எஸ்.சனுஜன், பொருலாளர் எம்.ருபேகாந்தன் பிரதேச ஆலயங்களின் குருமார்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச மக்களாலும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் அதிதிகள் ஊர்வலமாக விழா நடைபெற்ற முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன் போது தீவுச்சேனை, முத்துக்கல், கறப்பொல, உணாவெ, குடாப்பொக்கன போன்ற கிராமங்களைச்சேர்ந்த அறநெறி பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு மாணவர்களுக்கு இந்து கலாசார திணைக்களத்தினால் புத்தகங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதம அதிதி கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மாவை தீவுச்சேனை முத்துவிநாயகர் ஆலய நிருவாகத்தினாலும் பிரதேச செயலகத்தினாலும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.







No comments: