News Just In

5/26/2021 07:34:00 AM

கொரோனா தொற்றால் மேலும் 28பேர் உயிரிழப்பு- உயிரிழந்தவர்கள் தொடர்பான முழு விபரம் வெளியாகியது...!!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,269ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021 மே மாதம் 25 ஆம் திகதி 05 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.

மேலும், மே மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை கொவிட் நோயாளர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 18 ஆம் திகதி ஒருவரும், மே 19 ஆம் திகதி 04 மரணங்களும், மே 20 ஆம் திகதி 02 மரணங்களும், மே 21 ஆம் திகதி ஒருவரும், மே 22 ஆம் திகதி 02 மரணங்களும், மே 23 ஆம் திகதி 04 மரணங்களும், மே 24 ஆம் திகதி 09 மரணங்களும் பதிவாகியுள்ளன. அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1269 ஆகும்.

01. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 56 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 15 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, இருதயநோய் மற்றும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

02. களுத்துறை தெற்கு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 97 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 19 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத ;தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று மற்றும் குருதி நஞ்சானமை போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

03. புலத்சிங்கள பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 71 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 19 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, குருதி நஞ்சானமை, உயர் குருதியழுத்தம் மற்றும் இதயநோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

04. உனவட்டுன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 20 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

05. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 92 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 19 ஆம் திகதியன்று களுத ;துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமை, கொவிட் 19 தொற்று மற்றும் இதயநோய் மற்றும் கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.



06. ஹொரன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 22 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் இதயநோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

07. கோவின்ன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

08. கல்பாத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 32 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 22 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

09. ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 59 வயதுடைய பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10. மத்தக்க பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய பெண் ஒருவர், எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 62 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 24 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

12. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 88 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

13. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. வஞ்சாவல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 81 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

15. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 47 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

17. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 58 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 24 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.



18. மீப்பே பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 97 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 24 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

19. மாத்தறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 40 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட குருதிக்கசிவு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

20. அஹங்கம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் 2021 மே மாதம் 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

21. வேவெல்தெனிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய பெண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை, கொவிட் தொற்றால் மோசமடைந்த நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

22. ருவன்வெல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய பெண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

23. மீகஹதென்ன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 18 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, குருதி நஞ்சானமை மற்றும் இதயநோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

24. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 20 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, உயர் குருதியழுத்தம் மற்றும் இதயநோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

25. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று, உயர் குருதியழுத்தம், நீரிழிவு மற்றும் நாட்பட்ட ஈரல் நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

26. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

27. அகலவத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 21 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று மற்றும் குருதி நஞ்சானமை நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

28. தெஹியத்தகண்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 55 வயதுடைய ஆண் ஒருவர், வெலிகந்த விசேட கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 25 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: