மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கு அமெரிக்க உயர்மட்ட தூதுவர் அன்டனி பிளிங்கென் (Antony Blinken) நேற்றைய தினம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்த கருத்து வௌியிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்தை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் காஸா பிராந்தியத்திற்கான மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக அவர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், காஸா பிராந்தியத்தை மீள கட்டமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள், ஹமாஸ் கிளர்சியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என, அமெரிக்க உயர்மட்ட தூதுவர் அன்டனி பிளிங்கென் (Antony Blinken) வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் மற்றும் இஸ்ரேல் ஆகிய தரப்பினருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: