News Just In

9/01/2026 10:38:00 AM

மேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

மேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்



தமிழ்நாட்டின் மேட்டூா் அணையிலிருந்து பாசன வசதிக்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று(1) தண்ணீரைத் திறந்துவிடுகிறாா்.

இதற்காக சென்னையிலிருந்து வானூர்தி மூலம் சேலம் வானூர்தி நிலையத்துக்கு முற்பகல் 11 மணிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வீதி மாா்க்கமாக மேட்டூருக்கு நண்பகல் 12 மணிக்கு சென்றடைந்து, அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுகிறாா்.

காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்று முதல் 45 நாட்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.முதலமைச்சர் வருகையையொட்டி மேட்டூா் அணைப் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments: