News Just In

8/15/2026 05:53:00 PM

15 வயது சிறுமியை வன்புணர்ந்த 70 வயது பிஷப்

15 வயது சிறுமியை வன்புணர்ந்த 70 வயது பிஷப் 



லூர்து (Lourdes) நகருக்கு யாத்திரை சென்ற பிறகு, 15 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நார்த்தம்ப்டன் பிஷப் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

டேவிட் ஓக்லி (David Oakley, 70) என்ற பிஷப், கடந்த 2000-களின் ஆரம்பத்தில், அந்தச் சிறுமிக்கு 15 வயது மட்டுமே ஆனபோது அவளுடன் இருமுறை உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட காலகட்டத்தில் ஓக்லி தனது 40-களில் வயதுடையவராக இருந்ததுடன், கத்தோலிக்கத் குருவாகவும் பணியாற்றி வந்தார்.

ஸ்டாஃபோர்ட்ஷயர் காவல்துறையின் பலாத்காரம் மற்றும் தீவிர பாலியல் குற்றப்பிரிவு குழுவின் விசாரணையைத் தொடர்ந்து, ஜூன் மாதம் அவர் மீது 16 வயதுக்குட்பட்ட சிறுமியை இருமுறை பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை முதன்முதலில் எதிர்கொள்வதற்காக அவர் தனது வழக்கறிஞரின் அலுவலகத்திலிருந்து வீடியோ லின்க் (videolink) மூலம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், வியாழக்கிழமை (13) ஆஜரானார்.

ஓக்லியும் அந்தச் சிறுமியும் “லூர்து நகருக்கு யாத்திரையாகச் சென்ற பிறகு டேட்டிங் செய்யத் தொடங்கினர்” என்று வழக்கறிஞர் சாரா மேடன் (Sarah Madden) நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்: “பாதிக்கப்பட்ட அந்தப் பெண், பிரதிவாதியுடன் குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில் உடலுறவு கொண்டதை நினைவு கூர்கிறார்” என்றார்.

தெமேற்கு பிரான்சில் அமைந்துள்ள லூர்து நகருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். உலகின் அதிகம் பார்வையிடப்படும் கத்தோலிக்கத் திருத்தலங்களில் ஒன்றான லூர்து Our Lady of Lourdes சரணாலயத்தைப் பார்வையிட அவர்கள் இப்பகுதிக்குப் பயணம் செய்கிறார்கள்.

மேற்கு மிட்லாண்ட்ஸில் உள்ள ஸ்டவுர்பிரிட்ஜில் பிறந்த ஓக்லி, 1980 ஆம் ஆண்டில் கத்தோலிக்கக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் 2020 ஆம் ஆண்டில் நார்த்தம்ப்டன் பிஷப்பாகப் பதவியேற்றார். கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் காவல்துறையினரால் முதல்முறையாகக் கைது செய்யப்பட்ட அவர், தற்போது பொதுப் பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.

தலைமை மாஜிஸ்திரேட் பால் கோல்ட்ஸ்பிரிங் (Paul Goldspring) இந்த வழக்கைக் ஓல்ட் பெலிக்கு (Old Bailey) மாற்றியதை அடுத்து, நீதிமன்றத்தில் ஓக்லியிடம் இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்தும் வாக்குமூலம் கேட்கப்படவில்லை. நீதிபதி கூறுகையில்: “வழக்கின் பின்னணி மற்றும் பிரதிவாதியின் முன்னாள் வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இது மத்திய கிரிமினல் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்” என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்ணையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ தொடர்பு கொள்ளக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஓக்லியை அவர் பிணையில் விடுவித்தார். ஓக்லி செப்டம்பர் 10 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள வாக்குமூல விசாரணையின் போது அடுத்ததாக நீதிமன்றத்தில் ஆஜராவார்.

இந்தக் குற்றவியல் வழக்குகள் குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, “பழைய பாதுகாப்புப் புகார்கள்” குறித்த விசாரணையைத் தொடர்ந்தே ஓக்லி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நார்த்தம்ப்டன் கத்தோலிக்க மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.




No comments: