News Just In

7/08/2026 11:15:00 AM

நாட்டை உலுக்கிய சிறை மோதல்! பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடல்கள்

நாட்டை உலுக்கிய சிறை மோதல்! பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடல்கள்


நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடல்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழ்நதனர்.

இந்த மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








No comments: