இலங்கை உட்பட 60 வர்த்தகப் பங்குதாரர் நாடுகள் மீது 10 வீதம் மற்றும் 12.5 வீதம் என்ற புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா தற்போது விதித்துள்ள 10 வீத வரியின் காலம் முடிவடைந்ததை அடுத்து, இந்த தீர்மானத்தை ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது.
அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5 வீதம் என்ற உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த 60 நாடுகளில், கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடைசெய்யும் சட்டங்களை முறையாகச் செயல்படுத்தத் தவறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இந்நாடுகளின் இது தொடர்பான மெத்தனமான கொள்கையே இந்தப் புதிய வரிகள் விதிக்கப்படுவதற்கான முதன்மைக் காரணம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
No comments: