News Just In

7/26/2026 06:26:00 PM

‘மதுரை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் திங்கள் கிழமை 7°F வெப்பநிலை உயரும்’சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

‘மதுரை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் திங்கள் கிழமை  7°F  வெப்பநிலை உயரும்’சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



 தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை நாளை 7°F வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 28 முதல் 31-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஆக.1-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 30-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7°F   வரை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 °F குறைந்தபட்ச வெப்பநிலை 84°F அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

No comments: