News Just In

4/12/2026 05:50:00 AM

ஏப்ரல் 15 முதல் 17 வரைஅரச அலுவலகங்கள் வழமை போல் இயங்கும்!

ஏப்ரல் 15 முதல் 17 வரைஅரச அலுவலகங்கள் வழமை போல் இயங்கும்!



வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமை போன்று திறந்திருக்கும் என்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த தினங்களில் அரச ஊழியர்கள் இணையவழியில் பணியாற்றுவதற்கு முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்தத் தீர்மானம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான சேவைகளை எவ்விதத் தடையுமின்றி, வினைத்திறனான முறையில் வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களும் குறித்த மூன்று தினங்களிலும் வழமையான அலுவலக நேரங்களில் இயங்கும் என்பதுடன், ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்குச் சமூகமளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments: