குருக்கள்மடம் மனிதபுதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் 30 ஆம் திகதி ஆரம்பம்!
மட்டக்களப்பு - குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.
கடந்த 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீதவான் உத்தரவிட்டுள்ளதாக வழக்கில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
3/09/2026 07:57:00 PM
Home
/
Unlabelled
/
குருக்கள்மடம் மனிதபுதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் 30 ஆம் திகதி ஆரம்பம்!
குருக்கள்மடம் மனிதபுதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் 30 ஆம் திகதி ஆரம்பம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: