
2026 பிப்ரவரி 17-ஆம் திகதி உலகம் முழுவதும் வானியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது.
அது நெருப்பு வளைய (Ring of Fire) சூரிய கிரகணம். இந்த கிரகணம் “annular solar eclipse” என அழைக்கப்படுகிறது.
இதில் சந்திரன் பூமி மற்றும் சூரியன் இடையே வந்தாலும், அது சூரியனை முழுமையாக மறைக்காது. சந்திரன் சற்று சிறியதாகத் தோன்றுவதால், சூரியனைச் சுற்றி தீப்பொறி போல ஒளி வளையம் தோன்றும். இதுவே “நெருப்பு வளையம்” என அழைக்கப்படுகிறது.
இந்த கிரகணத்தின் முழு அழகான வளையம் அண்டார்டிகா பகுதியில் மட்டுமே தென்படும். அங்கு உள்ள Concordia Research Station மற்றும் Mirny Station போன்ற சில ஆராய்ச்சி மையங்களில் உள்ளவர்கள் நேரடியாகக் காண முடியும்.
தென் அமெரிக்காவில் சில பகுதிகள், குறிப்பாக சிலி மற்றும் அர்ஜென்டினாவின் தெற்குப் பகுதிகளில், சூரிய உதய நேரத்தில் பகுதி கிரகணம் தெரியும்.
தென் ஆப்ரிக்கா, மடகாஸ்கர், மொரீஷியஸ், சேஷெல்ஸ் போன்ற நாடுகளிலும் சூரியனின் ஒரு பகுதி மறைந்திருக்கும்.
அமெரிக்காவில் நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் இந்த கிரகணம் தெரியாது. ஆனால் அங்கு உள்ள வானியல் ஆர்வலர்கள் 2026 ஆகஸ்ட் 12-ஆம் திகதி நடைபெறும் முழு சூரிய கிரகணத்தை காண வாய்ப்பு பெறுவார்கள்.
பிரித்தானியாவில் லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க் போன்ற நகரங்களில் இந்த கிரகணம் தெரியாது.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) - துபாய், அபுதாபி போன்ற நகரங்களிலும் இந்த நிகழ்வு சூரியன் மறைந்திருக்கும் நேரத்தில் நடைபெறுவதால் காண முடியாது.
இந்தியா, இலங்கை: கிரகணம் அதன் நேர மண்டலம் காரணமாக இந்தியா மற்றும் இலங்கையில் தெரியாது.
ஆசியாவின் பெரும்பகுதி: வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளும் இந்த நிகழ்வை முழுவதுமாக இழக்கும்.
தென் அமெரிக்காவின் சில பகுதிகள்: சில தெற்கு பிராந்தியங்கள் பகுதி கிரகணத்தைக் காணலாம், ஆனால் அது முழு "நெருப்பு வளையம்" அல்ல.
No comments: