News Just In

10/26/2025 10:50:00 AM

கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருடன் மாமல்லபுரம் தனியார் விடுதியில் விஜய் நாளை சந்திப்பு


கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருடன் மாமல்லபுரம் தனியார் விடுதியில் விஜய் நாளை சந்திப்பு




கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பத்​தினரை விஜய் நாளை தனித்​தனி​யாக சந்​திக்​கிறார். கரூரில் மண்​டபங்​கள் கிடைக்​காத​தால், மாமல்​லபுரத்​தில் உள்ள தனி​யார் விடு​தி​யில் இதற்​கான ஏற்​பாடு​களை தவெக நிர்​வாகி​கள் செய்து வரு​கின்​றனர்.

கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி விஜய்​யின் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த விவ​காரத்​தில் விஜய் வீடியோ வெளி​யிட்​டு,உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு இரங்​கல் தெரி​வித்​தார். தொடர்ந்​து, சில நாட்​கள் கழித்​து, பாதிக்​கப்​பட்​டோரிடம் வீடியோ காலில் பேசி, நேரில் வரு​வ​தாக கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த 18-ம் தேதி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினர் வங்​கிக் கணக்​குக்கு தவெக சார்​பில் தலா ரூ.20 லட்​சம் வரவு வைக்​கப்​பட்​டது. மேலும், சட்​டரீ​தி​யாக அனு​மதி கிடைத்​ததும் நிச்​சய​மாகச் சந்​திப்​போம் எனவும் விஜய் தெரி​வித்​திருந்​தார். இதற்காககரூரில் மண்​டபத்​தில் வைத்து பாதிக்​கப்​பட்​டோரை சந்​திக்க விஜய் திட்​ட​மிட்​டார். இதற்​காக, கரூரில் மண்​டபங்​கள் பார்க்​கப்​பட்​டன. ஆனால், விஜய்​யின் சந்​திப்​புக்கு கரூரில் மண்​டபங்​கள் கிடைக்க சிக்​கல் நீடித்​த​தால், உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பத்​தினரை சென்​னைக்கு வரவழைத்து சந்​திக்க முடிவு செய்​துள்​ளார். இதற்​காக, பாதிக்​கப்​பட்​டோரை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு தவெக நிர்​வாகி​கள் பேசி​யுள்​ளனர்.

முதலில் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலு​வல​கத்​துக்கு அவர்​களை அழைத்து வந்து சந்​திக்க திட்​ட​மிட்​ட நிலை​யில், தற்போது அந்த திட்​டத்​தில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. அதன்​படி, மாமல்​லபுரத்​தில் உள்ள தனி​யார் விடு​தி​யில் 41 பேரின் குடும்​பத்​தினரை சந்​திக்க விஜய் முடிவு செய்​துள்​ள​தாக தவெக நிர்​வாகி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

அந்​தவகை​யில், இந்த சந்​திப்பு நிகழ்ச்சி நாளை (27-ம் தேதி) காலை நடை​பெறுகிறது. இதற்​காக, 41 பேரின் குடும்​பத்​தினரை​யும் மாவட்ட நிர்​வாகி​கள் மாமல்​லபுரத்​துக்கு அழைத்து வரு​கின்​றனர். இதற்​கான செல​வு​கள் அனைத்​தை​யும் தவெக சார்பில் ஏற்​றுக்​கொண்​டுள்​ளது. அவர்​களை தங்க வைப்​ப​தற்​காக, அந்த ஹோட்​டலில் 50-க்​கும் மேற்​பட்ட அறை​களும் முன்​வ​திவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக நிர்​வாகி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

அங்​கு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களை விஜய் தனித்​தனி​யாக சந்​தித்​து, அவர்​களு​டன் பேச இருக்​கிறார். கடந்த மாதம் 27-ம் தேதி தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த நிலை​யில், இந்த மாதம் அதே நாளில் அவர்​களது குடும்​பத்​தினரை விஜய்​ சந்​திக்​க இருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

No comments: