
கறுப்புஜூலை வாரத்தில் சகோதரத்துவம் எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்வு தமிழ் மக்களின் உணர்வுகளை உண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற கறுப்புஜூலை நினைவுவேந்தல் தின நிகழ்வில் விசனம் வெளியிடப்பட்டது
42 வருடங்களிற்கு முன்னர் கொழும்பில் தமிழ் மக்களிற்கு எதிரான கலவரம் ஆரம்பமான கனத்தை சுற்றுவட்டத்தில் கறுப்புஜூலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு தெற்கு சகோதரத்து அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் சிவில் சமூகத்தினர் மனித உரிமை ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கறுப்புஜூலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சகோதரத்துவம் என்ற பெயரில் யாழில் கறுப்பு ஜூலை வாரத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்வு குறித்து ஏமாற்றம் வெளியிடப்பட்டது.
தமிழ்மக்கள் நீதிவேண்டி நிற்கின்ற இந்த தருணத்தில் அவர்களிற்கு நீதி வழங்குவதற்கு பதில் அரசாங்கம் சகோதரத்துவம் என்ற பெயரில்ஆடல்பாடல்களில் ஈடுபடுகின்றது என கறுப்புஜூலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
கறுப்பு ஜூலை என் பது தமிழ் மக்களை பொறுத்தவரை மிகவும் உணர்வுபூர்வமான விடயம் ஆனால் தமிழ் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதத்தில் அரசாங்கம் நிகழ்வுகளை நடந்துகொள்கின்றது என விசனம் வெளியிடப்பட்டதுடன் தமிழ் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விடயத்தில் ஜேஆர் ஜெயவர்த்தன அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் இடையில் வேறுபாடு வேறுபாடு இல்லை என கருத்து தெரிவிக்கப்பட்டது
No comments: