News Just In

5/10/2025 01:21:00 PM

பிராந்திய வாய் சுகாதார பிரிவின் முதல் காலாண்டு மீளாய்வுக் கூட்டம்!

பிராந்திய வாய் சுகாதார பிரிவின் முதல் காலாண்டு மீளாய்வுக் கூட்டம்


நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களில் உள்ள வாய் சுகாதார பிரிவால் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு, பிராந்திய வாய் சுகாதார பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் காலாண்டு மீளாய்வுக் கூட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் யூ.ஹபீப் முஹம்மட் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இக்கூட்டம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உட்பட சுகாதார வைத்திய அதிகாரிகள், சமூக பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பாடசாலை பல் சிகிச்சையாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாய் சுகாதார பிரிவுகளால் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், குறித்த சேவைகளை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்வுகளும் பிராந்திய பணிப்பாளரினால் வழங்கப்பட்டது.

No comments: