News Just In

5/11/2025 07:38:00 AM

இன்று அதிகாலை கோர விபத்து; நான்கு பேர் பலி - 35 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

இன்று அதிகாலை கோர விபத்து; நான்கு பேர் பலி - 35 க்கும் மேற்பட்டோர் படுகாயம்



நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் கொத்மலை - கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

கதிர்காமத்திலிருந்து குருநாகல நோக்கிச் சென்ற பேருந்தே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி உள்ளது

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன்,

35க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களை அவசரமாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments: