News Just In

2/08/2025 06:27:00 AM

13வது திருத்தச் சட்டம் முழுமையாக இல்லாமல் போகும் - கோடீஸ்வரன் எம்.பி எச்சரிக்கை!


13வது திருத்தச் சட்டம் முழுமையாக இல்லாமல் போகும் - கோடீஸ்வரன் எம்.பி எச்சரிக்கை



13வது திருத்தச் சட்டத்திலுள்ள பல விடயங்களை எடுக்கின்ற போது அந்தச் சட்டமே இல்லாமல் போகும் துப்பாக்கிய நிலை ஏற்படுமென கோடீஸ்வரன் எம்.பி தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்விலே அவர் மேலும் தெரிவித்தாவது

உயிரற்ற நிலையில் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் காணப்படுகின்றது. அவற்றிற்கு உயிர் கொடுக்க வேண்டிய கடமை இருக்கின்றது. புதிதாக வந்த அரசாங்கம் இந்த விடயத்தில் கவனத்தை செலுத்தும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

13வது திருத்த சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஏற்கனவே இருந்த அரசாங்கஙத்தினால் எடுக்கப்ட்டு விட்டது. அதுபெரிய தவறாக காணப்படுகின்றது. இதனால் 13வது திருத்தச் சட்டம் முழுமையாக இல்லாமல் போகும் நிலை உருவாகும் அதனால் பாதிக்கப்டப்போவது வடகிழக்கிலே உள்ள மக்கள்.

சதோச நிறுவவனங்கள் தற்போது இல்லாமல் போய்விட்டது. அதனால் பல நேக்கு கூட்டுறவு சங்கங்களை நிறுவுங்கள் என குறிப்பிட்டார்

No comments: