(அஸ்ஹர் இப்றாஹிம்)
மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்,பெண் இருபாலாருக்குமான எறிபந்து போட்டிகள் கொத்மலை காமினி திஸாநாயக மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் (17) இடம்பெற்றது.
20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் கொத்மலை காமினி திஸாநாயக மத்திய மகா வித்தியாலயமும், 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் கலேவெல அல் புர்ஹான் மத்திய மகா வித்தியாலயமும்,20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் ஸ்ரீநாக மத்திய கல்லூரியும், 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் கோண்கஹவெல மத்திய மகா வித்தியாலயமும் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்
No comments: