மாளிகைக்காடு செய்தியாளர்
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் பயனாக அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி கேட்போர் கூடம் மற்றும் காரியாலய தேவைகளுக்கான தளபாடங்கள் கொள்வனவு செய்ய இன்று (25) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணம் பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
கமு/அக்/ அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை நிர்வாகத்திடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர்களான அதிபர் எம்.ஜெ. அன்வர் நௌஷாத், விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments: