News Just In

7/25/2024 01:02:00 PM

கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் எம்.ஏ.சலாம் தலைமையில் (22)நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தொழிலதிபர் முஹம்மட் றிஸ்வான் அவர்களும் கெளரவ அதிதியாக தலைமைத்துவ பயிறசி
வளவாளர் டொக்டர் எம்.ஸி.ஏ.நவாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்,உதவி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள்,பாடசாலை அபிவிருத்தி சபை பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

No comments: