News Just In

7/08/2024 05:26:00 AM

நள்ளிரவில் மோசமடையும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நிலைமைகள்! வைத்தியர் பரபரப்புத் தகவல்!



சாவகச்சேரி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்த விடயம் தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் காணொளியோன்றினை வெளியிட்டுள்ளார்.

அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளதாவது, நான் எனது தமிழ் மக்கள் சொல்லாமல் வைத்தியசாலையை விட்டு வெளியேற மாட்டேன்.

நான் 3 நாட்களாக எவ்வித பாது காப்பும் இல்லாமல் வைத்தியசாலையில் இருக்கிறேன் .
பொலிஸாரும் இந்த விடயத்தினை முடிந்தளவு பிரச்சினையில்லாமல் தான் தீர்க்கப் பார்க்கிறார்கள். வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண இரவு 7 மணியளவில் இடமாற்ற கடிதத்தை என்னிடம் கொடுக்க முற்பட்டார். அலுவலக நேரம் அல்ல என தெரிவித்து அதனை ஏற்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

No comments: