News Just In

7/07/2024 07:29:00 PM

மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பந்தனின் நினைவேந்தல்!



மறைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கான அஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடி நகரில் நடைபெற்றுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் களுவாஞ்சிகுடி வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை (06.07.2024) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உபதலைவர் பா.அரியநேத்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை, தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் க.சேயோன் மற்றும் மகளிர் அணி தலைவி உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, இரா.சம்பந்தனின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மை தலைவர்களின் மனங்கள் நோகாத வகையிலும் முஸ்லிம் மக்களை அரவணைத்துச்செல்லும் வகையிலும் சம்பந்தனின் பேச்சுகள் அமைந்திருந்தன என ஞா.சிறிநேசன் இதன்போது தெரிவித்தார்

No comments: