News Just In

7/11/2024 05:13:00 AM

யாழில் காசை காலால் மிதித்த தொழிலதிபர் நீதின்றம் பிறப்பித்த உத்தரவு



இலங்கை  நாணயத்தாளை காலால் மிதித்து அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகிய தியாகி அறக்கொடை நிறுவுனர் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த உத்தரவை யாழ்ப்பாணம் (Jaffna) நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம்  (9) பிறப்பித்துள்ளது.

அண்மையில் குறித்த தொழிலதிபர் நாணயத்தாள்களை நிலத்தில் போட்டு காலால் மிதித்த காணொளி ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது, அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, தியாகியின் உளச் சோர்வே நாணயத்தாள்களை மிதித்தமைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சட்டத்தரணி முன்வைத்த காரணத்தை ஏற்க மறுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, மனநிலையை வைத்து அவர் நீதிமன்றுக்கு கல் எறிந்தால் ஏற்றுக்கொள்வீர்களா எனவும் அவரது செயற்பாடு பற்றிய காணொளியை வெளியிட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? எனவும் கேள்வி எழுப்பியது.

எனினும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற பிரிவு முன்வைத்த குற்றச்சாட்டில் இருந்து மன்று இரண்டு ஆட்பிணையில் தியாகேந்திரனை விடுவித்து உத்தரவிட்டுள்ளது

No comments: