
சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பு ஏறாவூர் மணிக்கூட்டுக்கோபுரச்சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மத்தி வலயத்திற்கான இணைப்பாளர் ஆர்.றிக்னாஸ் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்க கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னுத்துரை உதயரூபன், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் பல்வேறு பதாதைகளை ஏந்தி நின்றனர்.
No comments: