News Just In

6/18/2024 08:51:00 PM

யாழில் இடம்பெறும் வாள் வெட்டுக்கள், ஆட்கடத்தல்களுக்கு துணைபோகும் இராணுவத்தினர்!



யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு மற்றும் ஆட்கடத்தல்களுக்கு பின்னால் இராணுவத்தின் மறைகரம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (18.06.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“கடத்தல்கள், கைதுகள் மற்றும் வாள்வெட்டு ஆகியவற்றுக்கு மலிந்த இடமாக யாழ்ப்பாண மண் தற்போது மாறியுள்ளது. இதற்கு பின்னால் இராணுவத்தினரின் மறைகரம் உள்ளது.

அத்துடன், பொலிஸாரின் ஒத்துழைப்புகளும் உள்ளன. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதே இதன் மூலம் வெளிப்படுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

No comments: