News Just In

6/07/2024 01:59:00 PM

4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்: ரணில் கடும் கண்டனம்!





தந்தை ஒருவரினால் 4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் இந்த விடயம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வயது சிறுமி மீதான கொடூரத் தாக்குதல் நாட்டையே உலுக்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை நடத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, சிறுமியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் இன்றி நாளைய எதிர்காலம் கிடையாது என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை தடுக்க சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

சிறுவர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு அதி உச்ச முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதவிய பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடங்களில் காணொளி வெளியிடப்பட்டிருந்தது.

குகுல் சமிந்த என்ற நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது

No comments: