News Just In

5/18/2024 05:46:00 AM

தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சிக்கு இடமளியாதீர்: சம்பந்தன்!




எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம் என்றும் அந்த முயற்சிக்குக் கடைசி வரை வாய்ப்பளிக்காதீர்கள் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் இன்றைய தினம் (17.05.2024) தொலைபேசியில் உரையாடிய விடயத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தன் விவரித்ததாவது,

“மாவை சேனாதிராஜாவுடன் இன்று காலை மீண்டும் கலந்துரையாடினேன். வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம்.

அதற்கு எக்காரணம் கொண்டும் தமிழரசுக் கட்சி இணங்கக் கூடாது, இடமளிக்கவும் கூடாது. கட்சிக்குள் இது தொடர்பான விடயத்தை உறுதியாக எதிர்த்து நில்லுங்கள் என்று அவருக்குக் கூறியுள்ளேன்.

சிறீதரனுக்கும், சுமந்திரனுக்கும் இது குறித்து நான் நேரில் விவரமாகத் தெரிவித்துள்ளேன்.

சிறீதரன் தம்மை வந்து சந்தித்து அது பற்றி கூறினார் என்று மாவை சேனாதிராஜா எனக்குப் பதில் அளித்தார்.” என தெரிவித்துள்ளார்

No comments: