News Just In

4/12/2024 01:30:00 PM

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு!



க.பொ.த உயர்தரப் பரீட்சை (GCE A/L) பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் (Department of Examinations) வெளியிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை (GCE A/L) கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன் 342,883 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: