News Just In

3/25/2024 07:50:00 PM

ஐந்து மணித்தியால விசாரணையின் பின்னர் யாருக்கும் தெரியாமல் பின்வழியால் வெளியேறிய மைத்திரி!



குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து மணித்தியால விசாரணையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்வாயில் வழியாக வெளியேறியுள்ளதாக தெரியவருகிறது 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த நிலையில் விசாரணையின் பின்னர் வெளியேறியுள்ளார்.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 10.30 மணிக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவிடம் ஐந்து மணித்தியால விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (25) அங்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்க்கும் வகையில் திணைக்களத்தின் பிரதான நுழைவாயில் இன்றி பிறிதொரு வாயில் வழியே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments: