News Just In

3/05/2024 08:30:00 PM

வாழைச்சேனையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!




மட்டக்களப்பு, வாழைச்சோனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 36 வயதான பெண்ணொருவர் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து நீல நிறம் கொண்ட புதிய ஜஸ் போதை பொருள் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருள் மற்றும் 8, 750 ரூபாய் பணம் என்பன அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: